#விருதுநகர் || மனைவி கறிகுழம்பு செய்து கொடுக்காததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மனைவி கறிகுழம்பு சமைத்து கொடுக்காததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் விவசாயி மாடசாமி (69). இவர் நேற்று மனைவியிடம் கறி குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவரது மனைவி நீங்களே சமைத்து சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு சென்று உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த விவசாயி மாடசாமி தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார். இதையடுத்து தனது மகன் ஜெயப்பிரகாஷிடம் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை, அதனால் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

உடனே மாடசாமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in virudhunagar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->