திருவாரூர்: மன உளைச்சலால் கணவர் விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் மன உளைச்சலால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(32). இவருக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கார்த்தி வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வலங்கைமான் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->