பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.! கத்தியால் குத்திய கணவர்.. கன்னியாகுமரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் நேற்று இரவு சாலை ஓரத்தில் கணவன்-மனைவி படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அந்த பெண் சத்தம் போடவே அருகில் படுத்திருந்த கணவர், மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரிடம் தகராறு ஈடுபட்டார். இதில் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து கணவன் மனைவி இருவரும் தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முதியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில், சாலை ஓரம் படுத்திருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்துள்ள.

இதைத்தொடர்ந்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவன் மற்றும் அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband stabs old man who sexually harassed his wife in kanniyakumari


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->