சவுக்கு சங்கருடன் இருந்த 2 பேர் யார்? சுற்றி வளைத்த போலீஸ்.. அதிரடி கைது.!
2 more person arrested with Savukku Shankar
காவல்துறை உயர் அதிகாரிகளையும் பெண் காவலரையும் விமர்சனம் செய்ததாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தேனியில் தங்கி இருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை இன்று காலை கைது செய்தனர்.
அவர் மீது பிணையில் வர முடியாத ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கோவை மாவட்ட போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் அழைத்துச் சென்ற போலீசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் படுகாயம் அடைந்த காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் கோவை புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே தேனியில் உள்ள தனியார் விடுதியில் சவுக்கு சங்கர உடன் தங்கியிருந்த அவரது கார் ஓட்டுநர் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியவரை பழசெட்டிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 more person arrested with Savukku Shankar