தருமபுரி | கணவர் மனைவி தகராறில் மனைவி தற்கொலை! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் கணவரிடம் தகராறு ஏற்பட்டதால் மனைவி தந்தை வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது:

தருமபுரி அருகே உள்ள ஆட்டுகாரம்பட்டி வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சந்தியா (வயது20), பிரியா (வயது 17) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சந்தியா தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

லட்சுமணன் அவரது மூத்த மகளான சந்தியாவை, பி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த அவரது தாய்மாமா  கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, கணவர்-மாணவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் சந்தியா கோபமடைந்து, தனது தந்தை வீட்டிற்கு வந்து அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று சந்தியா கல்லூரிக்கு சென்று வந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது குறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife fight wife sucide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->