ஜாமின் கோரி மனு: அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal



டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு கடந்த மூன்றாம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், தேர்தல் நடைமுறை சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த மேல்முறையீட்டு மனு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் வாதாடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை வருகின்ற 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal case adjourned 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->