வீட்டையே புரட்டி போட்ட மழை.. கண்சிமிட்டும் நேரத்தில் அரங்கேறிய துயரம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த நாராயணன் என்பவர், தனது வீட்டில் நேற்றிரவு மனைவி மற்றும் குழந்தை உள்பட 5 பேரும் தூங்கி கொண்டிருந்தார். 

இந்த நிலையில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த போது இவரின் மண் வீடு  திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது பேத்தி தனுஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

house, rain, seithipunal

இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற இருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இறந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீசார்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இச்சமபம் குறித்த முதற்கட்ட  விசாரணையில், நாராயணனின் வீடு ரயில் பாதை அருகில் கட்டப்பட்டிருந்தது. மேலும் கனமழை காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது. இதை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற அதிர்வில் ஈரப்பதத்துடன் இருந்த  இவரது வீடு இடிந்து விழுந்துள்ளது என்று தெரிகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house destroy due to rain in kadalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->