வாட்ஸ் ஆப்-பில் போட்டோ தொட்டால் ரூம் தேடி வரும் அழகிகள் - தமிழகத்தை சீரழிக்கும் அடுத்த ஹைடெக் மோகம் : சிக்கி சீரழியும் திருச்சி..!
hightech-Prostitution
திருச்சியில் ஹைடெக் முறையில் விபசாரம் களைகட்டி உள்ளது. வாட்ஸ் அப் மூலம் அழகிகள் படங்களை தேர்தெடுத்து அனுப்பினால், ரூம் தேடி அழகிகள் வருகின்றனர்.
தற்போது திருச்சியில் ஹைடெக் முறையில் வெளிமாநில இளம்பெண்களை கொண்டு விபசாரம் அரங்கேறி வருகிறது.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் அரங்கேறி வருகிறது.
இளம்பெண்களை முதலில் மாடர்ன் உடை அணிய வைத்து அதனை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அதில் அழகிகளுக்கு ரோஜா, மல்லிகை, தாமரை, முல்லை என கவர்ச்சிகரமான பெயர்கள் வைக்கிறார்கள்.
சில நேரங்களில் அழகிகளுக்கு எண்களும் அடையாளமாக கொடுக்கப்படுகிறது. விருப்பமான மலர், அல்லது எண்களை குறிப்பிட்டு அனுப்பி விட்டால் கவனிப்புக்கான நேரம் ஒதுக்கப்படுகிறது.
படங்களில் உள்ள அழகிகளை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்படும் சபல ஆண்கள் அங்கு சென்று அதற்கான கட்டணத்தை செலுத்தி உல்லாசம் அனுபவிக்கின்றனர்.
குறைந்த பட்சம் 2 மணி நேரத்தில் தொடங்கி, ஒரு சில நாட்கள் வரை கவனிப்புகான கட்டணம் நீள்கிறது. நேரத்திற்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒருசில இடங்களில் ஆம்னி காரில் இளம்பெண்களை கொண்டு ஹைடெக் முறையில் விபசாரம் நடந்து வருகிறது.
இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து இளம் சமுதாயத்தினரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.