வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு உதவி எண்கள்.. தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு.!
Helpline numbers for the safety of other states workers
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் வடமாநில தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது.
அதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது போல் உணர்ந்தால் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
அந்த வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Helpline numbers for the safety of other states workers