கடத்தல் சரக்கை, ரோடு ரோலர் விட்டு ஏற்றி அழித்த காவல் அதிகாரிகள்.. கதறலில் குடிமகன்கள்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் மதுஒழிப்பு சட்டமானது அமலில் இருக்கிறது. இதனையடுத்து மதுபோதைக்கு அடிமையான பலரும் மதுபானங்களை கள்ளச்சந்தை மூலமாக வாங்கி அருந்தி வந்தனர். இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவரும் பட்சத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்து மதுபானங்களை பறிமுதல் செய்து வந்துள்ளனர். 

இவ்வாறாக பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்ந்து குவிந்துகொண்டே செல்ல, மதுபானத்தை மொத்தமாக அழிப்பதற்கு குஜராத் மாநிலத்தின் வதோதரா காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் உட்பட ரூ.88 இலட்சம் மதிப்புள்ள 33 ஆயிரம் மதுபானத்தை அடுக்காக அடுக்கி வைத்துள்ளனர். பின்னர் அதில் சாலையை சமன் செய்ய உதவு ரோடு ரோலரை விட்டு ஏற்றி மதுபாட்டில்களை அழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Smuggling Alcohol bottle Demolished by Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->