அரசு பேருந்து மீது கல் வீச்சு - போலீசார் தீவிர விசாரணை!
government bus broken police investigation
திருநெல்வேலி, திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து இன்று காலை ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேயன்விளை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் பேருந்து மெதுவாக சென்றபோது அங்கு தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுமி பேருந்து பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.
இதில் பேருந்து பின்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இது குறித்து பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
government bus broken police investigation