தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து ., கோர விபத்தில் பலர் படுகாயம்.!
government bus accident
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே உள்ள சாலைப்புதூர் என்ற பகுதியில் திருப்பூரிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் பஸ் ரமேஷ்குமார் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.