சிறுமி மாயம்...! குடுகுடுப்பைக்காரர்கள் சுற்றித்திரிந்த தகவல் மேலும் அச்சத்தை கிளப்பியது...!
girls disappearance news pickpockets roaming around further raised fears
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கோவிந்தாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபுவின் 2-வது மகளான தனஸ்ரீ (8), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பில் பயின்று வருகிறார். வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் நோக்கில் வீடு வெளியேறிய தனஸ்ரீ, அதன் பின்னர் பள்ளி வளாகத்தை எட்டாதது மர்மத்துக்கு வழிவகுத்தது.

காலை 10 மணியளவில், “தனஸ்ரீ இன்று பள்ளிக்கு வரவில்லை” என பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு அழைத்துச் சொன்னதும், வீட்டில் கலக்கமே ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பாபு, சுற்றுப்புறங்களில் தீவிரமாக தேடியும் தனது மகளின் தடத்தை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
மேலும், புகாரைப் பெற்ற போலீசார், சிறுமி மர்மமாக மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கோவிந்தாபுரம் பகுதிக்கு சென்று சுற்றிப்பார்த்த போது, இன்று காலை சந்தேகத்திற்கிடமான முறையில் குடுகுடுப்பைக்காரர்கள் என அழைக்கப்படும் 3 பேர் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் “மாந்திரீக நோக்கத்துக்காக சிறுமி கடத்தப்பட்டாரா?” என்ற அச்சம் பொதுமக்களில் பரவியது.அதே நேரத்தில், சந்தேகத்திற்குரிய குடுகுடுப்பைக்காரர்கள் இருவரை பொதுமக்களே துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான தனஸ்ரீ குறித்து போலீசார் தொடர்ந்து பேருவேகமாக தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
girls disappearance news pickpockets roaming around further raised fears