புது போன் வாங்கி தந்த தந்தை..! குஷியில் சிறுமி செய்த வேலையால் நேர்ந்த துயரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மற்றும் காளியம்மாள். இந்த தம்பதியினர் இறந்து போன தன் மகளின் நினைவாக மரம் நடும் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர்களது இளைய மகள் மரம் நடுவதில் ஆர்வம் கொண்டு, 10 ம் வகுப்போடு முடித்து கொண்டார்.

மரங்கள் நடுவது குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள அர்ஜுனன் அவரது மகளுக்கு ஆண்டிராய்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார். புதிதாக செல்போன் கையில் கிடைச்சாலே சந்தோசம் தான்.

இந்த சிறுமியும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற அனைத்து செயலியிலும் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு புதிய நண்பர் வந்திருக்கிறார்.

அந்த சிறுமி தினமும் அவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். நாட்கள் போக, அந்த நட்பு காதலாக மாறியது. மரம் நடுவதில் போதுமான வருமானம் கிடைக்காததால் வேலை வேண்டும் என்று இந்த சிறுமி கேட்டுள்ளார். 

அதனால், ராதாகிருஷ்ணன் அந்த சிறுமியை வேலை வாங்கி தருவதாகக் கூறி சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து கோயம்புத்தூர் அழைத்து சென்று 4 நாட்கள் ஒரு விடுதியில் தங்க வைத்து, அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். 

இது குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி,வேலை வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவள் கர்ப்பமாக உள்ளதாகவும் இதே போல அவர் வேறு எந்த பெண்ணிடமாவது நடந்து கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை. 

அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த சிறுமியின் தந்தை இந்த சம்பவம் குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இது குறித்துப் பேசிய காவல்துறையினர், அந்த சிறுமியை ஏமாற்றிய நபரை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl sexual harassment by his lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->