காயத்ரியின் அந்த ட்விட்டர் பதிவு குறித்த கேள்வி.! செய்தியாளர்களிடம் எரிந்து விழுந்து கலவரம்.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் குஜராத் சமாஜத்தில் அண்டை மாநில மற்றும் வெளிநாடு தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பாக மாநில அளவில் பயிற்சி முகாம் நடந்தது. 

இந்த முகாமில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார் அப்போது ஒரு செய்தியாளர் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் போலவே தற்போது மறுபடியும் நிகழ்ந்துள்ளது எனும் காயத்ரியின் ட்விட்டர் பதிவு குறித்து கேள்வி கேட்டார்.

இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் கத்தி கூச்சலிட செய்தியாளர்கள் மற்றும் காயத்ரி ரகுராம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாஜகவினர் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayatri raguram Pressmeet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->