மோடியின் நிலை இதுதான்.. நடிகை காயத்ரி ரகுராம் கருத்து!
gayathri Raghuram comments modi
நடிகை காயத்ரி ரகுராம், பா. ஜனதாவில் இருந்து விலக்கிய பிறகு அரசியல் பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார். இருப்பினும் அடிக்கடி அண்ணாமலையை குறித்து விமர்சித்து வருகிறார்.
இது தற்காலிகமான இடைவேளை தான் எனவும் நிச்சயமாக பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காயத்ரி ரகுராம், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் சற்று பா. ஜனதா கட்சி வளர்ந்து இருக்கிறது என சொல்லலாம்.
ஆனால் பா. ஜனதா அண்ணாமலையால் ஒரு இன்ச் கூட வளரவில்லை என்பதுதான் உண்மை. திறமையான அரசியல்வாதியான எடப்பாடி பழனிச்சாமியினால் அ.தி.மு.க நிச்சயம் வளரும்.
கடந்த தேர்தலில் இரண்டரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. தற்போது பா. ஜனதாவிடம் இருந்து வெளியேறிய இந்த கட்சிக்கு கூடுதல் ஆதாயத்தை தான் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
English Summary
gayathri Raghuram comments modi