#சென்னை || திமுக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. பின்னணியில் கஞ்சா.!!
Ganja intoxicated youths cut DMK woman executive with sickle
கஞ்சா போதையில் தகராறு செய்த இளைஞர்களை தட்டி கேட்ட திமுக பெண் நிர்வாகிய வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கேநகர் வள்ளலார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதாகும் சரஸ்வதி ஆர்.கே நகர் மேற்கு பகுதி 38வது வட்ட திமுக கழகத் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை திமுக பெண் நிர்வாகியான சரஸ்வதி தட்டிக் கேட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த போதை இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். சிறிது நேரத்தில் திமுக பெண் நிர்வாகி சரஸ்வதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் வந்த கஞ்சா போது இளைஞர்கள் சரஸ்வதியின் அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆர்.கேநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ganja intoxicated youths cut DMK woman executive with sickle