இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பலில் ரகசிய பயணம் செய்த 4 தமிழ் இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பலில் ரகசிய பயணம் செய்த 4 தமிழ் இளைஞர்கள்.!

கடந்த மாதம் இருபத்தைந்தாம் தேதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. அதில், நான்கு தமிழ் இளைஞர்கள் ரகசியமாக நுழைந்துள்ளனர். 

இதையடுத்து இந்தக் கப்பல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நின்ற பொழுது கப்பலில் தமிழக இளைஞர்கள் இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் இந்த இளைஞர்கள் மற்றொரு கப்பலில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

அதன் படி வந்த இளைஞர்களை சர்வதேச கடல் பகுதியில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கடந்த 10ம் தேதி ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றுத் தெரிய வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து நான்கு தமிழ் இளைஞர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் நான்கு இளைஞர்கள் அத்துமீறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four youths handed srilanga police for tried to europe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->