#திருச்சி || 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் சில்மிஷம்! 4 காவலர்கள் அதிரடி கைது!
Four policemen arrested forharassing minor girl in Trichy
திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதிக்கு தனது ஆண் நண்பருடன் 17 வயது சிறுமி சுற்றுலா சென்றுள்ளார். அப்போது துவாக்குடி காவல் நிலைய உதவியாளர் சசிகுமார், நாவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாந்த், துவாக்குடி காவல் நிலைய காவலர் சித்தார்த், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாங்கின காவலர் சங்கரபாண்டியன் ஆகியோர் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இளைஞரும் சிறுமியும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் குமாரின் உத்தரவின் பெயரில் முசிறி மற்றும் திருவரம்பூர் காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் நான்கு காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியது உண்மையான தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து திருச்சி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தில் சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வந்த இந்த நிலையில் அவர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வரூண் குமார் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Four policemen arrested forharassing minor girl in Trichy