6 மயில்களை விஷம் வைத்து கொன்ற நபர்.! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸார்.!
Former poisoned and killed 6 peacocks
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ராஜபாளையம் கிராமத்தை சார்ந்தவர் காசிராஜா. இவர் திருவண்ணாமலை காட்டுப்பகுதிக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த விவசாய நிலத்தில் தினந்தோறும் பறவைகள் மற்றும் மயில்கள் வந்து பயிரை மேய்ந்து செல்வதால், இவைகளை விரட்ட ஒரு திட்டம் தீட்டி உள்ளார்.
அந்த வகையில் அதிகாலையில் விஷம் கலந்த உணவுப் பயிர்களை விவசாய நிலத்தை சுற்றி வீசியுள்ளார். இன்று அதிகாலை மேய்ச்சலுக்கு வந்த ஆறு பெண் மயில் மற்றும் ஒரு ஆண் மயில்கள் விஷம் கலந்த உணவுப் பயிர்களை உண்டு இறந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டதுடன், விவசாயி காசி ராஜாவை கைது செய்து வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்த வனச்சரக அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர்படுத்தி காசி ராஜாவை சிறையில் அடைத்தனர். தேசிய பறவையான ஆறு மயில்களை கொன்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Former poisoned and killed 6 peacocks