முன்னாள் அமைச்சரின் நெகிழ்ச்சி செயல்.. மக்கள், மருத்துவர்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் அதிகரித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வந்தது. மேலும், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. தற்போது கடந்த ஒரு வாரமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆக்சிஜனின் தேவையும் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. 

மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கும் மக்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணத்தை முன்னாள் அமைச்சர் வழங்கினார். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார். 

எலந்தக்குட்டை, பள்ளிபாளையம், குமாரபாளையம், கொக்கராயன்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான 24 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை, அதிமுக சார்பில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.21 இலட்சம் அளவிலான கருவிகளை வழங்கினார். மேலும், முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும் வழங்கினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former AIADMK Minister Thangamani gives Oxygen Equipment for Namakkal Komarapalayam GH 1 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->