திருவண்ணாமலை அருகே நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து, கார் - 5 பேர் பலி.!
five peoples died for accident in tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே திருவண்ணாமலை-பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்தும் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இடிபாடுகளை இடையேஏராளமானோர் சிக்கி இருந்ததனால், போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples died for accident in tiruvannamalai