வாலிபரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து தாக்குதல் - திருப்பூரில் சிக்கிய 5 சிறுவர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்ததையடுத்து ராஜ்குமாரின் மனைவியும், அவருடைய குழந்தையும் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள ராஜ்குமாரின் மாமனார் வீட்டில் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ராஜ்குமார் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கிரைண்டர் செயலி மூலம் வாலிபர் ஒருவர் ராஜ்குமாரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ராஜ்குமார் அந்த வாலிபர் கூறிய காட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். 

அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவருடன் ராஜ்குமார் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென்று நான்கு பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை சுற்றி வளைத்து தாக்கி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தான் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, போலீசார் 5 சிறுவர்களையும் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five boys arrest for Homosexuality in tirupur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->