நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, தருவைகுளம் மரியான் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜெனிஸ்டன் (வயது 24) கார்த்திக், அருள், நிவாஸ் உள்ளிட்ட 10 பேர் கடந்த 28ஆம் தேதி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டனர். 

அவர்கள் கடந்த மூன்றாம் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல் மையில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து அருகில் மீன் பிடித்த கொண்டிருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் துறைமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மினிகாய் கடலோர காவல் படை மற்றும் அதிகாரிகள் மினிகாய் தீவிற்கு சென்று பழுது நீக்கி படகில் இருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர். 

மீட்கப்பட்ட மீனவர்களும் படகும் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு தூத்துக்குடி அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen stranded sea Coast Guard rescued safely


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->