மீன் வரத்து குறைவு எதிரொலி! சென்னை காசிமேட்டில் மீன் விலை இரண்டு மடங்காக அதிகரித்து வஞ்சரம் மீன் 2500 ரூபாய்க்கு விற்பனை.! - Seithipunal
Seithipunal


மீன் வரத்து குறைந்துள்ளதால் சென்னை காசிமேட்டில் மீன் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். இன்னிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 61 நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் சிறிய நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே மீன்பிடிக்க செல்கின்றனர்.

இவர்கள் பிடித்து வந்த மீன்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இருப்பினும் மீன்பிடி தடை காலத்தினால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் சென்னை காசிமேட்டில் தொடர்ந்து மீன்களின் விலை உயர்ந்து உள்ளது. 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சர மீன் 2500 ரூபாய்க்கும், சங்கரா மீன் 350 ரூபாயிலிருந்து 750 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 600 ரூபாயிலிருந்து 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் அனைத்து மீன்களின் விலையும் இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish prices hiked due to supply shortage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->