இடி தாக்கியதில் தீவிபத்து.. பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகள் கருகி பலி..!
Fire due to thunder
கோழிப்பண்ணையில் இடிதாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், செம காட்டு பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. பத்தாயிரம் கறி கோழி கறி ஒப்பந்த அடிப்படையில் அவர் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தாராபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.
கோழி பண்ணை அருகே இருந்த மரத்தின் மீது இடி விழுந்தது. கோழிப்பண்ணையில் தீ பற்றியது. இந்த தீவிபத்தில் 5 ஆயிரம் கோழிக எரிந்து பலியாயின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.