கடலூர் || கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து.. நால்வர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் காயம்.

கடலூர் மாவட்டம், சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில், அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். அப்போது தீப்பந்தங்களை கொண்டு விளையாடியபோது,  எதிர்பாராத விதமாக பட்டாசு மூட்டையில் தீப்பொறிபட்டது.

பயங்கர சத்ததுடன் பட்டாசு வெடித்ததில் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இந்த வெடிவிபத்தில் லெட்சுமிநாராயணன், மாதவன், அர்ஜூனன் ஆகிய மூன்று சிறுவர்களும், சரத் என்ற இளைஞரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்து அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire Accident In Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->