வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு... தடியடி நடத்திய காவல்துறை..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிப்பு வந்தது. இந்த நிலையில், வாக்குப்பெட்டி அறை தாமதமாக திறக்கப்பட்டது.

மேலும், வாக்கு மையத்தில் முகவர்களை அனுமதிப்பதில் போலீசார் கட்டுப்பாடுகளை வைத்திருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து, போலீசாருடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight in vote counting center


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->