இருதரப்பு இடையே கோஷ்டி மோதல்.. குவிக்கப்பட்ட காவல் துறையினர்..!  - Seithipunal
Seithipunal


ன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் அருகே தேவாலய நுழைவுவாயில் கட்டுவதற்கான விவகாரத்தில் இருதரப்பினர்க்கும் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிள்ளையார்புரத்தில் 2008 ஆம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலய  நுழைவு வாயில் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையின் போது இருதரப்பினர்க்கும் இடையே கடுமையாக மோதல் ஏற்ப்பட்டு மோதிக் கொண்டனர். 

இதுதொடர்பான வழக்கில் நுழைவு வாயில் கட்ட  சாதகமாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் நுழைவுவாயில்  கட்டும் பணியை இன்று காலை ஒருதரப்பினர் தொடங்க இருந்தனர்.

இதற்கு மற்றோர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து  மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight for built church in kanyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->