14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!! தாயிடம் கதறிய மகள்! தாய் எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal



திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதுமணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையான ரவிச்சந்திரன், தினமும் தனது மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மது போதையில் தனது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 14 நிரம்பிய அவரது மகள் அவரது அப்பா செய்யும் கொடுமைகளை தனது தாயிடம் கூறியுள்ளார்.

தனது மகள் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தனது மகளை, அவரது அம்மாச்சி வீட்டிற்கு இரவோடு இரவாக அனுப்பியுள்ளார். ரவிச்சந்திரனின் குடும்பத்தார்கள் இந்த விஷயத்தை வெளியே கூற வேண்டாம் என மிரட்டியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரனின் மனைவி காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவரது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் மீதும் கொலை மிரட்டல் வழக்குகள் பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father sexual abused daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->