பெற்ற குழந்தைகளிடம் இச்சையை தீர்த்து கொண்ட தந்தை.. பாதக செயலால் நேர்ந்த விபரீதம்..!  - Seithipunal
Seithipunal


ரோட்டில் உள்ள பெருந்துறையை சேர்ந்த 48 வயதுடைய  குருநாதன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவிக்கு 7 மற்றும் 8 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இரண்டாவது மனைவி தன் இரு பெண் குழந்தைகளையும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணையைத் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

Image result for harassment seithipunal

மேலும், இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி மாலதி தெரிவித்ததாவது:- குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா இரண்டு லட்ச ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட குருநாதருக்கு தலா 20 வருடங்கள் என 40 வருடங்கள் சிறை தண்டனையும், மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும், அபராதத் தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க கூடும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father punished for abused his daughters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->