மாமனார் தற்கொலை..மனமுடைந்த மருமகளும் தற்கொலை.! ஆரணி அருகே அதிர்ச்சி.!
father in law and daughter in law suicide
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே மாமனார் விஷம் குடித்து இறந்த காரணத்தால் மருமகளும் மனமுடைந்து விஷம் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் அனியாலை என்ற கிராமத்தைச் சேர்ந்த வேலு விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் அதிகமாக கடன் வாங்கி செலவு செய்து இருக்கின்றார்.
இதன் காரணமாக வேலுவின் மருமகள் கடுமையாக திட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று இருவருக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் விரக்தி அடைந்த வேலு விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். எனவே, வேலுவின் தற்கொலைக்கு தான்தான் காரணம் என காவல்துறையினர் எண்ணுவார்கள் என்று நினைத்த மருமகள் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தொடர் தற்கொலைகள் காரணமாக அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
English Summary
father in law and daughter in law suicide