சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த புளியந்தோப்பு சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷ். இவர் வில்லிவாக்கம் பாரதியார் தெருவில் வசித்து வந்தார். இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி விமலா அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கருக்கா சுரேஷ் நேற்று மதியம் தனது உறவினர் அப்பு என்பவர் உடன் பாடியில் உள்ள இளங்கோ நகரில் பணியில் இருந்த தனது மனைவி விமலாவை பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது பாடி வன்னியர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது அங்கு 2 பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கருக்கா சுரேஷை வழி மறித்து அறிவரால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. 

அவர்களை தடுக்க முயன்ற அப்புவையும் வெட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொரட்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous rowdy hacked to death in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->