தண்ணீரில் மிதந்து தியானம்., கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய சிவனடியார்...!! - Seithipunal
Seithipunal


நட்சத்திர ஏறியில் அசைவின்றி மிதந்த மனிதரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைகானல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இங்குள்ள ஏரியில் நீண்ட நேரம் ஒருவர் மிதந்த படி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் படகில் சென்று பார்த்த போது ஒருவர் மிதந்து கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட தீயணைப்பு துறையினர் அவரை கரைக்கு வர சொல்லியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், பள்ளங்கி கோம்பை சேர்ந்த தங்கபாண்டி என்பதும் அவர் சிவனடியார் என்பதால் தண்ணீரில் நீந்தியபடி தியானம் செய்ததாகவும் தெரிவித்தார். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excitement by a person floating in Kodaikanal Lake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->