#கோவை : நர்சிங் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை - போக்சோவில் இன்ஜினியரிங் மாணவர் கைது - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் நர்சிங் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த இன்ஜினியரிங் மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் சாலையூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர் கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை தனது சொந்த ஊருக்கு கடத்திச் சென்றுள்ளார்.

பின்பு அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர், மகளைக் காணவில்லை என்று கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விக்னேஷின் சொந்த ஊருக்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering student arrested for kidnap and sexually harassing a nursing girl in kovai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->