#BREAKING : மின்சார வாரிய ஊழியர்கள் இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை.. மின்வாரியம் எச்சரிக்கை.!
Electricity board employees should wear uniform in tamilnadu
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகத்துக்கு சாதாரண உடை அணிந்து வர கூடாது என்றும், பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்கள் வேட்டி, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரித்துள்ளது.
English Summary
Electricity board employees should wear uniform in tamilnadu