பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியன்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் காந்தி செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காட்டு பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காந்தி செல்வனை கைது செய்துள்ளனர்.

இது குறித்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காஞ்சி செல்வனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electrician raped school girl in Salem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->