16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எலக்ட்ரீசன் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன். அவர் அதே பகுதியை 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  இதனை நம்பிய அந்த சிறுமியும் அவருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், 9மாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்நிலையில், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.  இதனை அடுத்து, மருத்துவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்  சேமலையப்பனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician Arrested in POCSO


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->