சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து!! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மிகவும் பரபரப்பாக இருக்க கூடிய சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

அண்ணனூர் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் ஆவடி அருகே சென்று கொண்டிருந்த போது நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்ய 4 மணிநேரத்திற்கு மேல் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கால தாமதமாக இயக்கப்படுகிறது.

ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து என தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric train derails in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->