#கன்னியாகுமாரி || மினி பஸ் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மினி பஸ் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற முதியவர் உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது மினி பஸ் ஒன்றின் பக்கவாட்டைத் பிடித்தபடி நடந்த அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை அறியாத பேருந்தின் ஓட்டுனர் பஸ்சை இயக்கியதில் பின்சக்கரம் முதியவரின் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elderly man dies after boarding minibus in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->