எனது கேள்விகள் எதற்கும் முதல்வர் பதிலளிக்கவில்லை: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!
Edappadi Palaniswami speech
சென்னை, தலைமை செயலகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்திகளை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்துள்ளேன். சட்டசபையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது.
தி.மு.க அமைத்த 52 குழு என்ன செய்கிறது என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம். முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.
வெள்ள பாதிப்பு குறித்தும் செலவினம் குறித்தும் கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami speech