அவசர அவசரமாய் மோடியை நாடும் எடப்பாடி.!! தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைவலி.!!
edapadi request to modi
நீண்ட காலமாகவே கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட தொடர்ந்து முயன்று வருகிறது. தமிழக அரசும் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
மேலும், இதுகுறித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை அவசியமானது என கர்நாடக அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகமானது கடுமையான வறட்சிக்கு உள்ளாகும்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட வைத்திருக்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.