அது எனக்கும், அன்புமணிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்!! ஸ்டாலினின் செயல்களுக்கு, எடப்பாடி அளித்த சூசக பதில்!!
edapadi palanisamy speech in dharmapuri about stalin
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர்," திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் பல போராட்டங்களை தூண்டிவிட்டு பார்த்தார், அத்தனையும் சமாளித்து மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி என்பது வேறு. அவரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், முதல்வர் பதவிக்கு மதிப்பளிக்காமல் ஸ்டாலின் மோசமாக பேசி வருகிறார். கிராமத்திலிருந்து வந்தவன் தானே என ஏளனம் செய்து பார்க்கிறார். நான் கிராமத்தில் இருந்து வந்தாலும், சக்தியுடன் தான் வந்துள்ளேன் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
படிப்படியாக உழைத்து முன்னேறி விசுவாசமாக, நியாயமாக முதல்வர் பதவிக்கு நான் வந்துள்ளேன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனாக நேரடியாக நான் பதவிக்கு வரவில்லை. அவர், இப்போது கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு செய்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை இத்தேர்தல் களம் இறக்கி விட்டுள்ளார். மத்திய சென்னையில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை உதயநிதி வேட்பாளராக அறிமுகம் செய்யும் நிலை திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், தென் சென்னை திமுக பெண் வேட்பாளரை, அழகான வேட்பாளர் எனக் கூறுவது அவரது அனுபவமின்மையை காட்டுகிறது. அவரது வயது அப்படித்தான். இது திமுகவின் பரிதாப நிலை, ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருகின்றார். அதன் மர்மத்தை நாட்டு மக்களிடம் விளக்குவாரா? கேட்டால் உடல்நலத்திற்காக என்கின்றனர்.
இதுவரை நான் 210 சட்டப்பேரவை தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்து இடைவிடாமல் மக்களை சந்தித்து வருகிறேன். காலை முதல் இரவு வரை பிரச்சாரம் செய்கின்றோம். திமுக தலைவர் ஸ்டாலின் என்ன காரணத்திற்காக லண்டன் சென்று வருகிறார் என்பது எனக்கு தெரியும். மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கும் தெரியும். ஆனால், எங்கள் இருவருக்கும் மரியாதை தெரியும் என்பதால், இது பற்றி எல்லாம் வெளியில் கூற விரும்பவில்லை" என அவர் பேசியுள்ளார்.
English Summary
edapadi palanisamy speech in dharmapuri about stalin