'ஸ்டாலின் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது' வெளியான அதிர்ச்சி தகவல்!! கூறியது யார் தெரியுமா?! அவரே தான்!!  - Seithipunal
Seithipunal


திமுக நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுக பொருளாளர் துரைமுருகன் உரையாற்றினார். அப்போது பேசிய துரைமுருகன், "தமிழகத்தில் ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் இல்லை. 

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இன்னும் 25 ஆண்டுகளில் வரும் தகுதியும், வாய்ப்பும் உள்ளவர் திமுக தலைவர் முக ஸ்டாலின். மேலும், இந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதம் வருவதற்கு காரணம் ஸ்டாலின் தான். 

Image result for duraimurugan seithipunal

ஸ்டாலின் மட்டும் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் மோடியா அல்லது வேறுயாராவதா என வந்திருக்க கூடும். திமுகவினர் அனைவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். 

நமது கட்சியில் உள்ள உட்பூசல்களை தேர்தல் முடியும்வரை மறந்துவிட வேண்டும். அதன் பின்னர் தேர்தல் முடிந்ததும் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan speech in thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->