'ஏய் போலீஸ் என்னை கைது பண்ணு' அராஜகம் செய்த போதை ஆசாமி.. ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை..!
drunken man argue with police officer
அந்தமான் தீவில் இருந்து வந்து, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருபவர் சுப்பையா இவரது மகன் பெத்துக்குமார். பெத்துக்குமார் கோவை காந்திபுரத்தில் உள்ள மதுக் கடையில் போதை தலைக்கேற மதுவை அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தவர்.
இந்த நிலையில், கோவை காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் மகேந்திரன் என்பவரிடம் பெத்துக்குமார் தன்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமா, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைந்துள்ளார்கள். மேலும் இது போல் கோவையில் மேலும் இரண்டு பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
drunken man argue with police officer