மனைவியை தீ வைத்து எரித்த போதை கணவர்.! சேலம் அருகே பரபரப்பு.!
Drunken husband who set his wife on fire in salem
சேலம் அருகே குடிபோதையில் கணவர் மனைவியை தீ வைத்த எரித்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் குரால்நத்தம் முத்தானூர் அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் கிரேன் ஆப்பரேட்டர் மணிகண்டன் (31). இவரது மனைவி ஜெயராணி. இவர்கள் இரண்டு பேருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆன நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினை இரவும் மணிகண்டன் குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், அருகில் இருந்த தீப்பெட்டியை எடுத்து ஜெயராணியின் நைட்டியில் தீயை பற்ற வைத்துள்ளார்.
இதில் உடல் முழுவதும் தீ பரவியதால், அவரது கை முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜெயராணியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெயராணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, மனைவியை தீ வைத்து எரித்த கணவர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Drunken husband who set his wife on fire in salem