இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
Drugs free Awareness from today in tamilnadu
தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால், போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதன் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, வரும் இன்று முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Drugs free Awareness from today in tamilnadu