தர்மபுரி பாமக - அதிமுக கோட்டை தான்... உறுதி செய்து, தோல்வியை ஒப்புக்கொண்ட திமுக எம்.பி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

இரவு 8 மணி நிலவரப்படி திமுக 159 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், அதிமுக 75 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சியை அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக கூட்டணி முன்னிலை வகித்தது.. இதில், பாலக்கோட்டில் கே.பி அன்பழகன் வெற்றி அடைந்தார். அரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார் வெற்றியடைந்தார். 

பிற 3 தொகுதிகளில் ஒன்று அதிமுக வசமும், மற்ற இரண்டும் பாமக வசமும் உள்ள நிலையில், காலை முதலாகவே அதிமுக - பாமக வேட்பாளர்கள் இந்த தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 

இதனை உறுதி செய்யும் பொருட்டு திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து 5 தொகுதிகளிலும் கணிசமான வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறது (திமுக என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்).   

முன்னணியில் இருந்த 3 திமுக மற்றும் 2 பாமக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு இன்னும் அதிக வலிமையை வழங்கும் என சமாளித்த திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார், தர்மபுரியை உருவாக்க கடுமையாக பாடுபடுவதோடு, புதுமையான மாற்றங்களையும் காணலாம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Dharmapuri Dr Senthil Kumar Accept Dharmapuri District Constituency DMK Loss and Kingdom of PMK AIADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->