திமுக ச.ம.உ வேட்பாளரின் இல்லத்தில் பறக்கும்படை அதிரடி சோதனை.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். இதனைத்தொடர்ந்து அவர் மொடக்குறிச்சி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும், மொடக்குறிச்சியில் உள்ள சின்னமாபுரம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை செய்துவரும் நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தங்கியுள்ள வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரம் வரை நடந்த சோதனையில் பொருட்கள் ஏதும் கிடைக்காததால், அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Modakurichi MLA Candidate House Flying Squad Search 1 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->