சட்டமன்றத்திற்குள் திமுக கொண்டு வந்த குட்கா பிரச்சனை.. நீதிமன்றம் அதிரடி தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் வருடம் சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக சபாநாயகர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இது குறித்த விசாரணை அனைத்தும் நிறைவு பெற்று இறுதி வாதங்கள் நடைபெற்றது. மேலும், அரசின் கவனத்திற்கு குட்கா பொருட்கள் விற்பனையை எடுத்துச் செல்லவே சட்டமன்றத்திற்குள் குட்காவை எடுத்து வந்ததாகவும் திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதத்தையும் ஏற்ற நீதிபதிகள், வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Gutka Bringing on Tamilnadu Assembly case Final Judgement 24 Aug 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->